கலசப்பாக்கம் அடுத்த கேட்டவரம்பாளையம் ஊராட்சியில் பசியில்லா திருவண்ணாமலை அமைப்பின் சார்பில் தூய்மை துப்புரவு பணியாளர்களுக்கு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வருவாய் ஆய்வாளர் பாண்டியன் கோரோனா நிவாரனம் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கேட்டவரம்பாளையம் ஊராட்சியில் பசியில்லா அமைப்பின் சார்பில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தூய்மை மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணம் அரிசி, மளிகை பொருட்கள் வருவாய் ஆய்வாளர் பாண்டியன் ஊராட்சி மன்ற தலைவர் சுபாஷ் பசியில்லா திருவண்ணாமலை அமைப்பின் தலைவர் பிரசாந்த் மற்றும் தன்னார்வலர்கள் விக்னேஷ், ராஜசேகர், ராஜேஷ், சதிஷ்குமார், ராஜேஷ், விக்னேஸ்வரன், நவின்குமார், சரவணன் ஆகியோர்கள் கழிந்து கொண்டு கொரோனா நிவாரணமளிகை பொருட்களை வழங்கினார்கள் தனபால் நிருபர் செங்கம்