குமரி மாவட்டம் தக்கலை அருகே தெப்பக்குளத்துக்கு குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

. கன்னியாகுமரி மாவட்டம். தக்கலை அருகே வாழவிளை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார், தொழிலாளி. இவருடைய மகன் சுபின்(வயது 17). சுபின் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை சுபின் நண்பர்களுடன் பத்மநாபபுரம் பகுதியில் உள்ள நீலகண்டசாமி கோவில் தெப்பகுளத்துக்கு குளிக்க சென்றார். அங்கு நண்பர்களுடன் உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென சுபினை காணவில்லை இதனால் சக நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, இதுபற்றி தக்கலை தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுபினை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சுபின், குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தது தெரிய வந்தது. இதற்கிடையே தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசாரும் விரைந்து வந்தனர். அதைத்தொடர்ந்து சுபினின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக உடலை தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் போர்முனை நிருபர்:M.சுரேஷ் 9843512525


Popular posts
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி நகராட்சிக்குட்பட்ட  கண்ணபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.க.ஜமுனாபாரதி உதவி ஆசிரியர் திருமதி.பு.பா.சுனிதா வட்டார கல்வி அலுவலர் திரு.குருநாதன் இவர்கள் மூவரின் தலைமையில் மாணவ மாணவிகளுக்கு ருபாய் 1200  மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் கிராம நிர்வாக அலுவலர் அவர்களின் முன்னிலையில் பள்ளியின் சார்பாக கடந்த 11.05.2020 அன்று வழங்கப்பட்டது
Image
யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . ஆர்.எஸ்.பாரதி யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
Image
குமரி மாவட்டத்தில் பணியாற்றிய பீகாரை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பபட்டனர்
Image
ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்கு 15 கோரிக்கைகள் கொண்ட மனுவை பிரதமர் மோடி அவர்களுக்கு அனுப்பிய FAIRA கூட்டமைப்பு தலைவர் ஹென்றி
Image